ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து என்ற படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு உதயநிதியுடன் பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி விட்டார். ஒரே படம் மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிவேதா, அடுத்தபடியாக நடிப்பதற்கும் சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார்.
இதுபற்றி நிவேதா கூறுகையில், ஒருநாள் கூத்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன். அது எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதைப்பார்த்துதான் பொதுவாக என்மனசு தங்கம் படத்திற்கு புக் பண்ணினார்கள். முதல் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த நான், இந்த படத்தில் தேனியிலுள்ள கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். சிட்டியில் வளர்ந்த எனக்கு கிராமத்து பாவாடை தாவணி அணிந்து நடிப்பது புதுமையாக இருந்தது. அந்த வேடத்தை ரசித்து நடித்தேன்.
அடுத்தபடியாக, ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதனால் அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர் களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் நிவேதா பெத்துராஜை பலரும் மதுரைக்கார பெண் என்கிறார்கள். ஆனால் அவரைக் கேட்டால், என் சொந்த ஊர் கோவில்பட்டி. நான் படித்தது துபாயில் என்கிறார்.