சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
30 வயதை கடந்து விட்டால் நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டு விடும் என்கிற நிலை மாறி, இப்போதெல்லாம் 30 வயதுக்கு பிறகுதான் சில நடிகைகளின மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், அனாமிகா, மாயா படங்களைத் தொடர்ந்து டோரா, அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு மெகா படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களின் டைரக்டர் டிகே இயக்குகிறார். தற்போது கலெக்டர், போலீஸ், ஹாரர், கிரைம் கதைகளில் நடித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் ஒரு செண்டிமென்ட் கதையில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழில் உருவானபோதும், மலையாளம், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட ஏஜிஎஸ் பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாம். கொலையுதிர் காலம் படத்தில் நடித்து வரும்போதே இந்த படத்திலும் நடிக்கிறாராம் நயன்தாரா.