சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த 12 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து வந்த நடிகர் ஆனந்த்ராஜ், ஜெயலலிதாவின் மறைவால் அக்கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஆனந்த்ராஜ். இவர் கடந்த 2004--ம் ஆண்டு அதிமுக., கட்சியில் இணைந்தார். அப்போது முதல் அதிமுக.,வின் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வந்தார். தேர்தல் பிரசாரங்களில் போது இவரும் ஊர் ஊராக சென்று அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சமீபத்தில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அப்போது முதலே அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருந்தார் ஆனந்த்ராஜ். மேலும் ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் தான் தலைவராக ஏற்று கொள்ள முடியாது என்று கூறி வந்தார்.
இந்நிலையில் அதிமுக., கட்சியிலிருந்து தான் விலகுவதாக ஆனந்த்ராஜ் அறிவித்துள்ளார். இதுப்பற்றி அதிமுக., தலைமை கழகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.... ‛‛ஆனந்த்ராஜ் ஆகிய நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் சேர்க்கப்பட்டேன். கழகத்தில் உறுப்பினராக சேர்ந்ததிலிருந்து இப்போது வரை கழக கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறாமல் இந்தக்கட்சிக்காக உழைத்து வந்தேன். ஜெயலலிதாவின் இழப்பு என் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. அதை யாராலும் ஈடு செய்ய முடியாது என்ற வலியின் காரணமாக கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இத்தனை காலம் எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து கழக தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்ராஜ், ‛‛ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் ஒப்பிட்டு வேறு யாரையும் பேச வேண்டாம். மூத்த தலைவர்கள் செங்கோட்டயன் பொன்னையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. இப்போதும் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தான். வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன்'' என்றார்.