சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‛2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய்குமார், எமிஜாக்சன் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முதல்பாகத்தை விட பிரமாண்டமாக இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக ‛2.O' உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாவதால் தற்போதைய சூழலில் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.400 கோடி என்று சொல்கிறார்கள்.
‛2.O' படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த அம்பத்தூரில் பிரமாண்டமான செட் போட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சென்னையை வாரிப்போட்ட வர்தா புயலால் ‛2.O' படத்தின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த செட்டின் ஒருபகுதி வர்தா புயலால் சிதைந்து போனதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் செட்டின் ஒருபகுதி சிதைந்ததால் தற்போது ‛2.O' படத்தின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் படக்குழு ஷூட்டிங்கை ஞாயிறு அன்றே நிறுத்தி வைத்திருந்தது. தற்போது செட்டுகளை மீண்டும் புதுபிக்கும் பணி நடக்கிறது. அது முடிந்தது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.