நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவரின், சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்ததன் மூலம், ஒரு ரவுடியைப் போல், நடிகை குஷ்பு நடந்து கொள்கிறார் என, பிரபல நடிகை ரஞ்சனி கண்டித்துள்ளார்.பிரபல நடிகை குஷ்பு, தனியார், டிவியில், குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்றவர் மீது ஆத்திரம்அடைந்த குஷ்பு, அவரது சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஷ்புவின் நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள, முன்னாள் நடிகை ரஞ்சனி, சமூக வலைதளத்தில் குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: லட்சக் கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில், இவ்வாறு ஒரு ரவுடி போல் குஷ்பு நடந்து கொள்வது, கண்டனத்துக்குரியது. குடும்ப பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறி, இது போன்று நடப்பது, கேவலமான செயல். உண்மையில், குடும்ப பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, குஷ்பு போன்றவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? தங்கள் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புவோர், இதற்கான ஆலோசனைகள் அளிக்கும் தன்னார்வ அமைப்புகளை நாடலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.