சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினிமுருகன், ரெமோ படங்களுக்கு பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கதையில் தனக்கான பங்கு என்ன என்பதை டைரக்டர்களிடம் துருவி துருவி கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில், தன்னை கவர்ந்த டைரக்டர்களான மணிரத்னம், கெளதம் மேனன் உள்பட சில முன்னணி டைரக்டர்களின் பெயரை பட்டியலிட்டுக்கொண்டு அவர்களின் படங்களில் நடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போது கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது கீர்த்தி சுரேஷ் செலக்ட் ஆகவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அவர் இயக்கத்தில் நடித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதேபோல் கெளதம்மேனனையும் அடுத்த டார்கெட்டாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அவர் இயக்கி வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தை பார்த்துவிட்டு உடனே அவருக்கு போன் செய்து படத்தில் தன்னை கவர்ந்த விசயங்களை பகிர்ந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். அப்போது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது ஆசையையும் தெரிவித்துள்ளாராம்.