சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெய்வத்திருமகள் படத்தை இயக்கியபோது அந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த அமலாபாலை காதலித்தார் ஏ.எல்.விஜய். அதன்பிறகு விஜய்யை வைத்து அவர் இயக்கிய தலைவா படத்தில் அமலாபால் நாயகியாக நடித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஓராண்டு மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தனுசுடன் வடசென்னை படத்தில் நடித்து வரும் அமலாபால், அதையடுத்து திருட்டுப்பயலே-2 படத்திலும் நடிக்கிறார். அதோடு, இதுவரையில்லாத அளவுக்கு படுகவர்ச்சியான உடையணிந்து செல்பி எடுத்தும் டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அமலாபால். ஆனால் அந்த போடடோக்களைப்பார்த்து அவரது ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில், அமலாபால் அளித்துள்ள பேட்டியில், இப்போதும் தான் ஏ.எல். விஜய்யை காதலிப்பதாக கூறியுள்ளார். அவர் மீது இப்போதும் எனக்கு காதல் உள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர். அவரை பிரிவதாக எடுத்த முடிவு ரொம்ப கடினமானது. அதேசமயம், வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத வயதில் திருமணம் செய்து கொண்டதை நினைத்து இப்போது வருந்துகிறேன். ஆனால் அதை நினைத்து நான் உடைந்து போகவில்லை. விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன். வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே என்னிடம் மேலோங்கியுள்ளது என்கிறார் அமலாபால்.