அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்த பிறகு தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்து வந்தபோதே பலரது கவனத்தை இழுத்த அவர், விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதையடுத்து கெளரவ் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் அறிமுகமாகி விட்டார்.
மேலும், இந்த படம் இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றிருப்பதால் இப்போது ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டார் மஞ்சிமாமோகன். அதனால் இந்த வேகத்தில் கீர்த்தி சுரேஷ் போன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற முயற்சிகளிலும் இறங்கியுள்ளார் அவர். அதன்காரணமாக, விஜய்யின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, நான் கேரளாவில் இருந்தபோதே விஜய்யின் தீவிரமான ரசிகை என்று சொல்லிக்கொண்டு அடுத்து அவரை வைத்து படம் இயக்கயிருக்கும் அட்லி உள்ளிட்ட டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்தி வருகிறார் மஞ்சிமா மோகன்.