சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பஞ்சாபை சேர்ந்தவர் மெஹ்ரீன். பரதநாட்டிய கலைஞராக வாழ்க்கையை தொடங்கி மாடலாக மாறியவர். அதன் பிறகு இந்த ஆண்டின் துவக்கதில் வெளிவந்த தெலுங்கு படமான கிருஷ்ணா காடி வீர பிரேம கதா மூலம் நடிகையானர். இதில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது துவடா ஜெகன்னாதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்றவர் அங்கு பில்லாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் மெஹ்ரீன். மாவீரன் கிட்டு படத்திற்கு பிறகு சுசீந்திரன் தெலுங்கு, தமிழ் மொழியில் இயக்கும் புதிய படத்தில் மெஹ்ரீன்தான் ஹீரோயின். சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கிறார்.
"நிறைய பஞ்சாபி பெண்கள் தமிழ் சினிமாவில் சாதித்திருக்கிறார்கள். நானும் அந்த வரிசையில் இடம்பிடிப்பேன் என்று நம்புகிறேன். தமிழ் படத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கமிட் ஆனபிறகு சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு, ஜீவா, நான் மகான் அல்ல படங்கள் பார்த்தேன். நல்ல திறமையான இயக்குனருடன் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன்" என்கிறார் மெஹ்ரீன்.