அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
தன்னிடம் வாங்கிய ஒரு கோடி ரூபாய் முன்பணத்தை சிம்பு திருப்பித் தர மறுக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது:
இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பு ஹீரோவாக நடிக்க லிங்குசாமி ஒரு படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக சிம்புவுக்கு சம்பளம் பேசி ஒரு கோடி ரூபாய் முன்பணமும் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய லிங்குசாமியால் சிம்புவுடன் பணியாற்றும் படத்தை தொடங்க முடியவில்லை.
இதனால் தான் கொடுத்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கேட்டார் லிங்குசாமி. "ஒப்பந்தப்படி படம் எடுங்கள் நடிக்கிறேன். ஆனால் அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்தர் மூலம் கேட்டுப் பார்த்தபோதும் "தவறு உங்கள் மேல் இருக்கிறது. நான் இதில் தலையிட மாட்டேன்" என்று கூறிவிட்டாராம். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.