சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கவுதமி விவகாரத்தில் நான் எந்த அறிக்கையும், வெளியிடவில்லை என்று கமல் கூறியுள்ளார். திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, கமல் - கவுதமி ஜோடி பிரிந்தது. கமலை விட்டு பிரிவதாக, கவுதமி, நேற்று அறிவித்தார். இதுப்பற்றி நடிகை கவுதமி ஒரு பக்க அறிக்கையாக வெளியிட்டார். குறிப்பாக நானும் கமலும் பிரிந்து விட்டோம் என்பதை, கனத்த இதயத்துடன் உங்களிடம் பகிர்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்க்கையில், நான் எடுத்த பேரழிவு முடிவு இது என்று கூறியிருந்தார்.
இதனிடையே கமல்ஹாசன் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அதில், ‛‛என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என் தட்டில் வந்துவிழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டிலிருந்து விழும் மற்ற மலங்களைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்'' என்பது மாதிரியான தகவல்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. ஆனால் இதை கமல் வெளியிடவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனே தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை'' என்று கூறியுள்ளார்.