அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவார் என்று நடிகை நமீதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக செப்., 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய பிரபலங்களும் பலரும் மருத்துவமனை சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதல்வரின் உடல்நலம் பற்றி நலம் விசாரித்து சென்றார். இந்நிலையில் இன்று நடிகையும், அதிமுக., உறுப்பினருமான நமீதா, முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா... ‛‛முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து வருவார், பூரண நலம்பெற்று மீண்டும் அவர் மக்கள் பணிக்கு திரும்புவார்'' என்று கூறியுள்ளார்.