சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் தொடங்கி விஜய் நடித்த ஜில்லா படம் வரை 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் அவர் தயாரித்த படங்களில் ஏறக்குறைய 90 சதவிகித படங்கள் வெற்றிப்படங்கள்தான். ஹீரோக்களின் சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்தது, தயாரிப்பு செலவு அதிகரித்தது, படங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சனை ஆகிய காரணங்களால் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பிலிருந்து விலகி இருந்தார்.
கடைசியாக அவர் தயாரித்த ஜில்லா படமும் கசப்பான அனுபவமாக முடிந்ததால் இனிமேல் படங்களை எடுப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தார். இந்நிலையில் ஜீவாவின் சிபாரிசில் ஆர்யாவை வைத்து கடம்பன் என்ற படத்தை தயாரிக்க முன்வந்தார். மஞ்சப்பை ராகவன் இயக்கும் இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா நடிக்கிறார். முதலில் ஆர்.பி.சௌத்ரி மட்டுமே தயாரிப்பதாக இருந்த கடம்பன் படத்தை இப்போது ஆர்யாவின் ஷோ த பீப்பிள் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.