ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
பாடகர்கள் கானா பாலா, கானா உலகநாதன், கானா அந்தோனி போன்றவர்கள் தான் தாங்களே பாடல்கள் எழுதி பாடி நடித்தும் வந்தனர். அந்த வரிசையில்,
கடந்த சில ஆண்டுகளாக அருண்ராஜா காமராஜூம் இணைந்திருக்கிறார். சில படங்களில் கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், பல படங்களில் பாடல்கள் எழுதி பின்னணியும் பாடி வருகிறார். என்றாலும், சந்தோஷ் நாராயணன் இசையில் கபாலி படத்தில் எழுதிய பாடிய நெருப்புடா பாடல் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டது.
அதனால் இப்போது அவரது மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. கபாலிக்குப்பிறகு ரெமோ, வாகா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என பல படங்களில் பாடல்கள் எழுதி பாடி வரும் அருண்ராஜா காமராஜ், நெருப்புடா ஹிட்டைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் பல புதிய படங்களில் பாடல் எழுதி பாடி வருகிறார். இதில் மரகத நாணயம் -என்ற படத்தில் ஒரு அதிரடியான பாடலை அவரை எழுதி பாட வைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன். இந்த பாடல் இன்னொரு நெருப்புடா என்று தன்னை சந்திப்பவர்களிடம் கூறி வருகிறார்.