சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆர். பார்த்திபன் கடைசியாய் இயக்கியது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை. இந்தப்படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.ஒரு சில படங்களில் தற்போது நடித்து வரும் பார்த்திபன் மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது. கிரவுட் ஃபண்டிங் முறையில் பலரது முதலீட்டுடன் பார்த்திபன் தயாரிக்கும் இந்தப்படத்தில் அவர் ஹீரோ இல்லை. அவரது குருநாதரான பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்!
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இவர். மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட பார்வதி நாயர் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார். இதற்காகத்தான் பார்வதி நாயரை தேர்வு செய்தாராம் பார்த்திபன். சாந்தனு அண்மையில் திருமணம் செய்த கீர்த்தி மலையாளப் பெண்தான். நிஜ வாழ்க்கை ஜோடியைப்போலவே தற்போது படத்திலும் சாந்தனுவுக்கு மலையாளப்பெண் ஜோடியாகி இருக்கிறார். என்னே ஒரு ஒற்றுமை?