சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் எஸ்.பி.முத்துராமனுக்கு நிகர் யாரும் கிடையாது. நேற்று நடந்த காகித கப்பல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் வெற்றிமாறனை புகழ்ந்து பேசியதுடன் விசாரணை படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமா உலக அளவில் உயரும். விருது கிடைக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: நான் 70 படம் இயக்கி இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. என்னுடைய குழு. என்னுடைய 70 படத்திலும் ஒரே டெக்னீஷயன்கள் பணியாற்றினார்கள். இப்போது வரும் இளைஞர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். வெற்றிமாறன் போன்றவர்கள் வித்தியாசமான படத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார்கள். அதனால்தான் இப்போது வெற்றி மாறன் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
விசாரணை ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருப்பது அந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். விசாரணை ஆஸ்கர் விருதை பெற்றால் தமிழ் சினிமா உலக தரத்திற்கு உயரும். அதற்கு நிறைய போட்டிகள் இருக்கிறது. உலகம் முழுழுவதும் இருந்து படங்கள் வரும். அதையெல்லாம் தாண்டி விசாரணை விருதை பெற நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்போம். நல்லதே நடக்கும். என்றார்.