சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் தற்போது இயக்கி வரும் படம் ரூபாய். கயல் சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரிஷ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள், இமான் இசை அமைக்கிறார். சாட்டை படத்தை தயாரித்த இயக்குனர் பிரபு சாலமனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி அன்பழகன் கூறியதாவது: சாட்டை படத்தை தெலுங்கில் தயாரிக்க டாக்டர் ராஜசேகர் விரும்பினார். அதனால் சில நாட்கள் தெலுங்கு பக்கம் போனேன். சில காரணங்களால் அங்கு படத்தை தொடங்க முடியவில்லை. அதன் பிறகு என்ன பண்ணலாம் என்று யோசித்தபோதுதான் வங்கி கொள்ளை, நகை கடையில் கொள்ளை, வழிப்பறின்னு ஏகப்பட்ட செய்திகளை படித்தேன். பணத்தை கண்டுபிடித்த மனிதனை அந்த பணம் எவ்வளவு அடிமையாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். மக்கள் ஏன் பணத்துக்கு பின்னால் இப்படி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை தேடினேன் ரூபாய் கதை உருவானது.
தேனியை சேர்ந்த கயல் சந்திரனும், கிஷோரும் நண்பர்கள். அவர் இருவரும் இணைந்து ஒரு லாரியை லோனுக்கு வாங்கி லோடு அடிக்கிறார்கள். சந்திரன் டிரைவர், கிஷோர் கிளீனர். அந்த லாரிதான் அவர்களுக்கு எல்லாமே. லாரிக்கு தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் தேனியிலிருந்து சென்னை பூ மார்க்கெட்டுக்கு சவாரி கிடைக்கிறது. அந்த லோடுடன் சென்னை வருகிறார்கள். லோடை இறக்கியதும் வீடு ஷிப்ட் பண்ற லோடு ஒண்ணு கிடைக்கிறது. வந்த இடத்துல எக்ஸ்ட்ரா வருமானமாச்சே தவணை கட்ட உதவும் என்று அந்த வேலையை ஏற்கிறார்கள்.
அங்குதான் அவர்களுக்கு பிரச்சினையே ஆரம்பமாகிறது, பணத்துக்கு ஆசைப்பட்ட சென்றவர்கள் சிக்கலை விலைகொடுத்து வாங்குகிறார்கள். படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. பணமும் பணத்தாசை பிடித்த மனிதர்களும் வில்லன்கள். சாட்டையில் கல்வியை சொன்னேன். ரூபாயில் பணத்தை சொல்கிறேன். அதில் வசனங்கள் அதிகம், இதில் வலி அதிகம். என்கிறார் அன்பழகன்.