சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து விட்டு, தற்போது கழுகு கிருஷ்ணா நாயகனாக நடித்து வரும் வீரா படத்தில் நாயகியாக நடித்து வருபவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தில் ஊட்டியில் படித்து விட்டு வட சென்னைக்கு வரும் கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யாமேனன், இந்த படம் வெளியாகும்போது தமிழ் சினிமாவில் நானும் கவனிக்கப்படும் நடிகையாகி விடுவேன். அந்த அளவுக்கு எனக்கு அழுத்தமான நாயகி வேடம் கிடைத்திருக்கிறது என்கிறார்.
மேலும், சில புதிய தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதற்காகவும் தீவிரமாக கதை கேட்டு வருவதாக சொல்லும் ஐஸ்வர்யா மேனன், வீரா படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தோடு முடிவடைந்ததும் அடுத்த மாதத்தில் இருந்து புதிய படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிப்பாராம். இந்தநிலையில், அவரைப்பற்றி மீடியாக்களில் சில தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக சொல்லி பீல் பண்ணுகிறார் ஐஸ்வர்யாமேனன்.
அதுபற்றி அவர் கூறுகையில், வீரா படத்தைப்பற்றி படம் வெளியாகும்வரை எந்த செய்தியையும் மீடியாக்களுக்கு சொல்லக்கூடாது என்று டைரக்டர் கூறியிருப்பதால் அந்த படம் விசயமாக நான் அதிகமாக மீடியாக்களிடம் வாய் திறப்பதே இல்லை. ஆனால், தற்போது நான் சம்பளத்தை பெரிதாக எதிர்பார்க்காமல் பாக்கெட் மணி போன்று சம்பளம் கொடுத்தாலே நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் நான் யாரிடமும் அப்படி சொன்னதே இல்லை. சினிமாவில் நடிக்க வந்ததே புகழ், பணம் இந்த இரண்டிற்காகவும்தான். பாக்கெட் மணி போதும் என்றால் நடிக்க வரவேண்டிதில்லையே. அப்பா -அம்மாவே தருவார்களே என்கிறார் ஐஸ்வர்யாமேனன்.