சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"சினிமா மக்களுக்கான அரசியலை பேச வேண்டும்" என்ற கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார். பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய எழுத்தாளர் கீரா தற்போது இயக்கி உள்ள படம் மெர்லின். விஷ்ணுபிரியன், அஸ்வின், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது:
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப்போடும். பராசக்தியில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும் காக்கா முட்டை, ஜோக்கர் மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.
இன்றைய தேவை களப்பணிகள். சினிமாவும் ஒரு களப்பணிதான். கலை என்பது சிறந்த அரசியல் ஆயுதம். எந்த மக்களுக்காக கலை பேசுகிறதோ. அந்த மக்களிடமிருந்தே கலை பிறக்க வேண்டும். இதற்காக படைப்பாளிகள் மக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும். எல்லா படங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் இருக்க வேண்டும். அது மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும். என் படங்கள் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். என்றார்.
விழாவில் இயக்குனர்கள் தங்கர்பச்சான், தாமிரா, வசந்த பாலன், மீரா கதிரவன், நடிகர் ஆரி, சிங்கம்புலி, விஷ்ணுப்ரியன். நடிகை அஸ்வினி, லொள்ளுசபா ஜீவா, டாக்டர் இளையராஜா, தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்