சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினி படங்களுக்கு மக்கள் மத்தியில் இந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான காரணம்... ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிதான். அந்த இடைவெளிதான் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
ஆனால் தற்போது ரஜினியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'எந்திரன்' 2ஆம் பாகத்தின் அறிவிப்புக்குப் பின்னர், கபாலி படம் திடீரென அறிவிக்கப்பட்டது.
அதோடு மளமளவென உருவாகி, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகி, வசூல் மழையும் பொழிந்தது. இப்போது 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கிவரும் '2.0' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பரில் நிறைவடையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன்னுடைய 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தையும் 'கபாலி' பட இயக்குநர் பா.ரஞ்சித்தே இயக்கவிருக்கிறார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் கபாலி படக்குழுவினர் இணைகிறார்களே தவிர கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்கிறது பா.ரஞ்சித் தரப்பு.