பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்த நயன்தாராவை தான் இயக்கிய ஐயா படம் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் ஹரி. அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அப்படம் வெற்றி பெற்றதால் தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் புக்காகி முன்னணி நடிகையாகி விட்டார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்து விட்டவர், தற்போது ஷோலோ ஹீரோயினி கதைகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிங்கம்-3 படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் சாமி-2வை இயக்கும் ஹரி, அந்த படத்தில் மீண்டும் நயன்தாராவுக்கு சான்ஸ் கொடுக்கயிருப்பதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி விசாரித்தால், சாமி-2 படத்தில் கண்டிப்பாக நயன்தாரா இல்லை என்கிறார்கள். காரணம், சிங்கம்-2 படத்தில் அஞ்சலி நடனமாடிய பாடலில் ஆட முதலில் நயன்தாராவைதான் அழைத்தாராம் ஹரி. ஆனால், அவர் குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில்லை என்று மறுத்து விட்டாராம்.
அதன்பிறகுதான் அந்த வாய்ப்பு அஞ்சலிக்கு சென்றிருக்கிறது. ஆனால் ஏற்கனவே ரஜினி, விஜய படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடிய நயன்தாரா, தனது படத்தில் நடனமாட மறுத்து விட்டதால் இனிமேல் தனது படங்களில் அவரை நடிக்க வைக்கப்போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டாராம் ஹரி.