நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பழம்பெரும் நடிகர் நாகேஷ் தன்னுடைய சம்பாத்தியத்தில் சென்னை, தி.நகரில் கட்டிய திரையரங்கம் தியேட்டர் நாகேஷ். தியேட்டர் நாகேஷ் என்று பெயர் வைக்கப்பட்டாலும் மக்கள் அந்த திரையரங்கத்தை நாகேஷ் தியேட்டர் என்றே அழைத்து வந்தனர். வியாபாரிகள் நிறைந்த இடத்தில் அமைந்ததினாலோ என்னவோ நாகேஷ் தியேட்டர் வெற்றிகரமாக இயங்கவில்லை. எனவே நாகேஷ் திரையரங்கம் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக மாற்றபட்டது.
தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது 'மானே தேனே பேயே', 'கடை எண் 6' ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், அறிமுக இயக்குனர் முகமது இசாக் இயக்கும் 'நாகேஷ் திரையரங்கம்' படத்திலும் நடிக்கவிருக்கிறார்!
சென்னை பாண்டி பஜாரில் இயங்கி வந்த நாகேஷ் தியேட்டர் போலவே பல திரையரங்கங்கள வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் நாகேஷ் திரையரங்கத்தை பின்னணியாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஆரி ரியல் எஸ்டேட் ஏஜென்டாக நடிக்கிறாராம். முன்னாள் கதாநயகி நடிகையான பானுப்ரியா ஆரிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.