சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர் மித்ரன் ஜவஹர். செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ஆடவரி மாட்டுலேகு அர்திலே வீரலே என்ற படத்தை தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அன்று தொடங்கிய அவரது ரீமேக் பயணம் இன்று வரை தொடர்கிறது. தெலுங்கு ஆர்யாவை குட்டி என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரெடி படத்தை உத்தம புத்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். தற்போது மலையாள தட்டையன் மறயத்து படத்தை மீண்டும் ஒரு காதல் கதையாக ரீமேக் செய்துள்ளார். ஆனால் எனக்கு ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ரீமேக் செய்ய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள் என்கிறார் மித்ரன் ஜவஹர்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: என்னை பொறுத்த வரை ரீமேக் என்பது கடினமான ஒரு விஷயமாகும். ரீமேக் படங்கள் இயக்குவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. யாரடி நீ மோகினி படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் இதை கூறி வருகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அதைப்போன்று ஒரு படத்தை இயக்கும்படி எல்லோரும் கேட்பது இயல்பு. நான் இயக்கிய ரீமேக் படங்கள் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரீமேக் படங்களை இயக்கும் படி எல்லோரும் கேட்கிறார்கள்.
ரீமேக் படம் என்றாலும் இப்படத்தில் என்னுடைய முத்திரை என்பது நிச்சயம் இருக்கும். இப்படத்தில் வேறு விதமான பாடல்கள் இருக்கும் , காட்சி அமைப்பு வேறு விதமாக இருக்கும். தட்டத்தின் மறையத்து படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு , படத்தை நாங்கள் வேறு விதமாக எடுத்துள்ளோம். மீண்டும் ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம்'' என்கிறார் மித்ரன் ஜவஹர்.