பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான படம் 'ரோஜா'. 25 வருடங்களுக்கு முன்னால் ஆகஸ்ட் 14, 1992ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. வித்தியாசமான கதைக்களமும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் புதிய அலையை ஏற்படுத்தி இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக இந்தப் படம் அமைந்தது.
'தளபதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி, 'ரோஜா' படத்தில் தனி நாயகனாக நடித்து தனது நடிப்பால் ரசிகைகளை அதிகம் கவர்ந்தார். 80களில் அதிக ரசிகைகளை வைத்திருந்த கார்த்திக்-குக்குப் பிறகு அரவிந்த்சாமிதான் ரசிகைகளை அதிகம் கவர்ந்த ஒரு ஹீரோவாக உயர்ந்தார். ஆனால், அவர் நீண்ட வருடங்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதல், பிரிவு அதன் பிறகு அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்பதை காஷ்மீர் தீவிரவாதத்தின் பின்னணியில் வித்தியாசமான கதையுடன் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்தார் இயக்குனர் மணிரத்னம். இளையராஜாவின் இசையை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஒலியமைப்பில் காட்டிய தொழில்நுட்பம் வியக்க வைத்து அவருக்கென தனி ரசிகர்களை உருவாக்க ஆரம்பித்தது.
அரவிந்த்சாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ், பங்கஜ் கபூர், வைஷ்ணவி அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். 1992ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய படம், வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியர் விருது, ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என மூன்று தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ளியது. 25 வருடங்கள் ஆனாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கியமான படமாக 'ரோஜா' படம் இன்றும் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.