சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்ட துணை ஆட்சியர் உமேஷ் என்பவர் தனது டுவிட்டரில், கேரளாவிலுள்ள அட்டப்பாடி என்ற கிராமத்து மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதோடு, கல்வி அறிவு, அரசின் நலத்திட்டங்களை பெறுவது எப்படி என்பது கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லால் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், விஜய் அவர்களை சந்தித்து பேசினால் அவர்கள் விழிப்புணர்வு அடைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.
அதையடுத்து இந்த செய்தியை அவர் கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலமாக சென்னையிலுள்ள தலைமை ரசிகர் மன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் விஜய்க்கு தகவல் சென்றதும், நேற்று அவர் துணை ஆட்சியர் உமேஷை அழைத்து சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அந்த அட்டப்பாடி கிராமத்தைப்பற்றி முழுமையாக கேட்டறிந்துள்ளார் விஜய். இந்த சந்திப்பை அடுத்து கேரளாவிலுள்ள அந்த அட்டப்பாடி கிராமத்துக்கு விரைவில் சென்று அந்த மக்களை விஜய் சந்திப்பார் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.