சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் மற்றும் கன்னடத்தில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ள படம் முடிஞ்சா இவன புடி. கன்னட நடிகர் சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், சதீஷ், நாசர் நடித்துள்ளனர். இதனை கன்னட தயாரிப்பாளர் எம்.பி.பாபு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்கள். இரண்டு மொழிகளிலும் நாளை வெளிவருகிறது. இதனை தமிழ் நாட்டில் ராக்லைன் வெங்கடேஷ் வெளியிடுகிறார்.
ராக்லைன் வெங்கடேஷ் ரஜினி நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர். லிங்கா படத்திற்கு நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் போர்க்கொடி உயர்த்தினர். தயாரிப்பாளர் சங்கம் முன்னிலையிம் பணம் பைசல் செய்யப்பட்டது. தற்போது ராக்லைன் வெங்கடேஷ் வெளியிடும் முடிஞ்சா இவன புடி படத்திற்கு சில விநியோகஸ்தர்கள் தடையாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா நஷ்டஈட்டை முழுமையாக தரவில்லை என்று கூறி படத்துக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது: லிங்கா படத்தின் பிரச்சினைகள் எப்போதோ முடிந்து விட்டது. 95 சதவிகித பணத்தை செட்டில் பண்ணிவிட்டேன். இன்னும் 5 சதவிகிதம் பாக்கி உள்ளது. அது வேந்தர் மூவீஸ் மதனுக்கு கொடுக்க வேண்டியது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் கொடுக்க முடியவில்லை. வேறு யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு வேந்தர் மூவீசிடமிருந்து செட்டில்மெண்ட் கடிதம் பெற்றுத் தரவேண்டும்.
ஒரு சிலர் அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்டு மிரட்டுகிறார்கள். அதை கொடுக்க மறுத்தால் படத்தை வெளியிட விடமாட்டோம் என்கிறார்கள். முடிஞ்சா இவன புடி படம் வருகிற 12ந் தேதி (நாளை) வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. படத்தை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்வேன் என்றார் ராக்லைன் வெங்கடேஷ்.