சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷாலின் கத்திச்சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. இந்த படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் வடிவேலுவும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்களாம். மேலும், இதையடுத்து வடிவேலு பல படங்களில் காமெடியனாக நடித்து வருவதாக கூறப்பட்டபோதும், அவரது தரப்பில் விசாரித்தால் வடிவேலு, அடுத்தபடியாக இம்சை அரசன்-2 படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக மட்டுமே சொல்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான வடிவேலு, மதுரையிலுள்ள தனது சொந்த ஊரில் ஏதாவது கோயில் விசேஷம் என்றால் குடும்பத்துடன் அங்கு பறந்து விடுகிறாராம். அதோடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சரஸ்வதி சிலை வைத்திருக்கிறார். எல்லோரும் வீட்டு வரவேற்பறையிலோ அல்லது வாசல் அருகிலோ விநாயகர் சிலை வைத்திருக்க வடிவேலுவோ, புதுமையான முறையில் சரஸ்வதி சிலையை வைத்திருக்கிறார். தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்யப்படுவதோடு, சரஸ்வதியை வணங்கி விட்டு வெளியே செல்வதை வழக்கத்தில் வைத்திருக்கிறாராம் வடிவேலு.