சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் காதல் பிசாசே என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பாடலாசிரியர் யுகபாரதி. அதைத் தொடர்ந்து
விஜய்யின் புதிய கீதையில் வசியக்காரி, திருடா திருடியில் மன்மதராசா, சந்திரமுகியில் கொஞ்ச நேரம் என பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய யுகபாரதி, தற்போது முன்னணி பாடலாசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். அதோடு, சுசீந்திரன் இயக்கும் மாவீரன் கிட்டு என்ற படத்தில் முதன்முறையாக அவர் வசனம் எழுதுகிறார்.
இதுபற்றி யுகபாரதி கூறுகையில், இதுவரை நான் எந்த படத்திற்கும் வசனம் எழுதியதில்லை. பாடல்களில் மட்டுமே எனது முழுக்கவனமும் இருந்தது. இந்த மாவீரன் கிட்டு படத்தில் வசனம் எழுதுமாறு டைரக்டர் சுசீந்திரன் கேட்டுக்கொண்டதால் எழுதி வருகிறேன். இப்படம் 1980-களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது. அதனால் அந்த காலகட்டத்தில் வழக்கில் இருந்த தமிழ் சொற் களை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன். அந்த வகையில், படங்களுக்கு வசனம் எழுதுவதும் ஒரு புதிய அனுபவமாகத்தான் உள்ளது.
மேலும், நான் முழுப்பாடல்களையும் எழுதிய ஜோக்கர் படம் விரைவில் திரைக்கு வருகிறது. இது ஒருவகையான அரசியல் படம். இந்த சமூகத்துக்கு தேவையான படம். இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் மக்களுக்கும் தேவையானவை. நான் பாடல் எழுதி திருப்தி கொடுத்த பல படங்களில் இந்த ஜோக்கர் படமும் ஒன்று. முழுக்க முழுக்க கமர்சியல் கதைகளுக்கு பாடல்கள் எழுதி வரும் வேளையில், இதுபோன்று சமூக நோக்கமுள்ள கதைகளுக்கு பாடல் எழுதுவது படைப்பாளிகளுக்கு மனதளவில் திருப்தியை கொடுக்கிறது என்கிறார் யுகபாரதி.