நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
சினிமாவில் ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ டூப் போட்டு படம் எடுக்கும் வழக்கம் உண்டு. ரிஸ்க்கான சண்டை காட்சிகள், சேசிங் காட்சிகளுக்கு நடிகர்களுக்கும், பலாத்தாரம் போன்ற காட்சிகளுக்கு நடிகைகளுக்கும் டூப் போடுவார்கள். இதற்காகவே ஒவ்வொரு நடிகர்களின் ஜாடையில் டூப் நடிகர்கள் இருப்பார்கள். இப்படி டூப் போடும் முறை தமிழ் சினிமாவுக்குள் வந்த கதை சுவாரஸ்யமானது.
1939ம் ஆண்டு வெளிவந்த படம் சாந்த சக்குபாய் சேலம் ராயல் டாக்கீசார் இதனை தயாரித்தார்கள். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார். இது ஒரு கிருஷ்ண பக்தையின் கதை. அந்த பக்தை சக்குபாயாக கே.அஸ்வத்தமா என்ற நடிகை நடித்தார். அவரைச் சுற்றி நடக்கிற கதை. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அஸ்வத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். படம் பாதியில் நின்று விட்டது. அதுவரை செலவு செய்த தயாரிப்பாளர்கள் கலங்கி நின்றார்கள்.
அப்போதுதான் இயக்குனருக்கு ஒரு யோசனை வந்தது. தமிழ்நாடு முழுவதும் தேடி அஸ்வத்தம்மாவை போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணை கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டே மீதி படத்தை எடுத்து முடித்தார்கள். கேமராவை தொலைவில் வைத்து படம்பிடித்தும், முதுகுபுற காட்சிகள் வைத்தும், தலையில் முக்காடு அணியச்செய்தும் சமாளித்து படத்தை முடித்தார்கள். அஸ்வத்தம்மாவுக்கு பதிலான வி.ஆர்.தனத்தை பாடவைத்து அதனை படத்தில் சேர்த்தார்கள்.
படம் வெளிவந்த பிறகு ரசிகர்களால் டூப்பை கண்டுபிடிக்க முடிவில்லை. அதனை ரகசியமாகவே வைத்திருந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் நட்கர்னி அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருந்தார். ஆக முதல் டூப் போடப்பட்டது அஸ்வத்தம்மாவுக்காகத்தான்.