அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
ஹீரோக்களை மட்டும் நம்ம ஊரில் உற்பத்தி பண்ணிவிட்டு, கதாநாயகிகளை வட இந்தியா, பெங்களூரு, கேரளா என பல மாநிலங்களில் இருந்து கடன் வாங்கி இப்போதுவரை காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த தமிழ்சினிமாவில் அவ்வப்போது சில தமிழ் பெண்களும் நடிகைகளாக அறிமுகமாகத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணாக தென்றலாக நுழைந்து தமிழ்த்திரையுலகை தனது நடிப்பால் தலைநிமிரவைத்த தமிழச்சி தான் சமந்தா. அட.. தெலுங்கு ஹீரோவை காதலித்து கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..
அப்படிப்பட்ட சமந்தா படித்தது சென்னையில் தான்.. அதுவும் பள்ளிப்படிப்பை படித்தது பல்லாவரத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் மெட்ரிக் பள்ளியில் தான். படிக்கும்போதே சமந்தா சமத்துப்பிள்ளையாக இருந்திருக்கிறார்.. பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் இவர் அதிக மதிப்பெண்களும் முதல் ரேங்க்கும் எடுத்ததை பார்த்து இவரது வகுப்பு ஆசிரியை, சமந்தா இந்த பள்ளியின் சொத்து என பாராட்டியிருக்கிறார்.. வீட்டில் சமந்தாவும் அவரது அம்மாவும் வேறு எதையோ ஒன்றை தேடப்போக அவரது மார்க் ஷீட் கண்ணில் பட்டிருக்கிறது.. உடனே மகளை பார்த்து அம்மா பெருமிதப்பட, மகளோ இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளலாம் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.