சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஷங்கரின் பாசறையில் வந்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அட்லி, அடுத்தப்படமே விஜய்யை வைத்து தெறி எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். தற்போது ஜீவா நடிப்பில் ‛சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார். தெறி படத்திற்கு பிறகு அட்லீ, விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இது தெறி-2 படமாக இருக்கும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது அவர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அண்மையில் அஜித்தை சந்தித்த அட்லி, ஒரு கதையை சொன்னதாகவும், அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்தை பாலிவுட்டின் ‛பிக் பி' என போற்றப்படும் அமிதாப் பச்சன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித்-அமிதாப் இணையப்போவது இது முதன்முறையல்ல, ஏற்கனவே 1996ம் ஆண்டு, ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான ‛உல்லாசம்' படத்தை தயாரித்தவரும் அமிதாப் பச்சன். அப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் தமிழில் பட தயாரிப்பிலும் அமிதாப் ஈடுபடவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் படம் மூலம் அமிதாப், தமிழ் பட தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தற்போது அஜித், 3வது முறையாக சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 57-வது படமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 58-வது படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.