ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் முதல் ஷங்கர் என்றால் அது ராஜா சாண்டோதான். அவரது படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருக்கும். அவர் இயக்கிய ஒரு படம்தான் 'சவுக்கடி சந்திரகாந்தா‚. பக்காவன முதல் கமர்ஷியல் படம் என்றும் இதனை குறிப்பிடலாம். கே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதை நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதைத்தான் ராஜா சாண்டோ படமாக இயக்கினார். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் 1936ம் ஆண்டு வெளிவந்தது.
போலி சாமியாரை பற்றிய கதை. திருக்களூர் பண்டார சன்னிதி என்ற சாமியாருக்கு ஏராளமான காதலிகள், ஒவ்வொரு காதலியும் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சாமியாரின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்குகிறார் என்பதுதான் கதை. சாமியாராக காளி என்.ரத்னம் நடித்திருந்தார். அவரை அடக்கும் ஹீரோவாக பி.யூ.சின்னப்பா நடித்திருந்தார். பி.கே.ராஜலட்சுமி ஹீரோயின். என்.எஸ்.கிருஷ்ணன் காமெடியன்.
சினிமாவில் காதலர்கள் தொடாமல் பேசிக் கொண்டிருந்தபோது தொட்டு பேசி நடிக்க வைத்தவர் ராஜா சாண்டோ. இந்தப் படத்தில் கூடுதலாக ஒரு படி மேலே போய் நடிகைகளை நீச்சல் உடையுடன் நடிக்க வைத்தார். சாமியாரின் காதலிகள் அனைவரும் ஒரு தடாகத்தில் நீந்துவது போன்ற காட்சியில் நடிகைகளுக்கு குட்டை டவுசரும், சின்ன சட்டையும் வைத்திருந்தார். உடையை பார்த்த நடிகைகள் தெறித்து ஒடினார்கள். ஆடை மறைக்கும் இடம் தவிர மற்ற இடங்களை மறைக்கும் மெல்லிய உடையை (ஸ்கின் டிரஸ்) அவர்களிடம் காட்டி விளக்கிச் சொன்ன பிறகு நடித்தார்கள். படம் வெளிவந்து தியேட்டரில் படத்தை பார்த்த நடிகைகள் அதிர்ச்சி அடைந்தார்க்ள. கருப்பு வெள்ளை படம் என்பதால் ஸ்கின் டிரஸ் அணிந்திருந்தது தெரியவில்லை.
இந்தப் படம் இன்னொரு சாதனையை படைத்தது. அப்போதெல்லாம் ஒரு படம் ஒரு ஊரில் ஒரு தியேட்டரில்தான் திரையிடப்படும். 'சவுக்கடி சந்திரகாந்தா‚ முதன் முறையாக சென்னையில் 2 தியேட்டர்களில் வெளியானது.