சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நிறைய நடிகைகள் வந்திருக்கிறார்கள், அவர்களில் சமீபத்திய வரவு மஞ்சிமா மோகன். கேரளாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கி, ‛ஒரு வடக்கன் செல்பி'யில் ஹீரோயினாக அறிமுகமானார் மஞ்சிமா. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அவரை அப்படியே தமிழுக்கும் கொண்டு வந்துவிட்டது. முதல்படமே கெளதம் மேனனின் ‛அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தில் தமிழ் பதிப்பில் சிம்புவுடனும், தெலுங்கில் நாக சைதன்யாவுடனும் நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு எல்லா நடிகைகளுமே போட்டி தான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛தினமும் புதுபுது நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இவர் ஒருவர் தான் போட்டி என்று சொல்ல மாட்டேன். எல்லோருமே எனக்கு போட்டியாளர்கள் தான். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு கவலையில்லை, என்னுடைய கவனம் எல்லாம் நடிப்பில் மட்டுமே இருக்கும். எனக்கான படங்கள் கிடைத்தே தீரும், அதையாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.