சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'எங்கேயும் எப்போதும்' படத்தில் இணைந்து நடித்தபோது ஜெய், அஞ்சலி இருவருக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதை இருவருமே மறுக்கவில்லை. ஆனால் அப்போது அஞ்சலியின் 'குடும்ப நண்பராக' இருந்த இயக்குநர் களஞ்சியம் என்பவர் ஜெய்யிடமிருந்து அஞ்சலியை மீட்டுத்தரும்படி நடிகர் சங்கத்தில் வாய்மொழி புகார் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி ஹைதரபாத்தில் செட்டிலானார். அதனால் அஞ்சலி - ஜெய் காதல் விவகாரம் அடங்கிப்போனது.
இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு ஜெய், அஞ்சலி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் சினிஷ் என்பவர் இயக்குகிறார். இது காதல் கலந்த திகில் படமாம்! இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேறு ஒரு நடிகையைத்தான் இயக்குநர் கமிட் பண்ண திட்டமிட்டிருந்தார். ஜெய்தான் அஞ்சலியை சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக்கியுள்ளார். அஞ்சலியும் நானும் நண்பர்கள் என்று சொல்லும் ஜெய் அது காதலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததை நினைவில் கொள்க.