சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என 3 படங்களின் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்தவர் வெற்றி மாறன். தற்போது தனுஷ் நடிப்பில் 'வடசென்னை' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. வடசென்னைக்கு பிறகு வெற்றிமாறன் விவசாயிகள் தற்கொலை பற்றிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். விசாரணை படம் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் எழுதிய 'லாக்அப்' என்ற நாவலை தழுவியது. அதேபோல கோட்டா நீலிமா என்ற பத்திரிகை நிருபர் எழுதிய 'ஷூஸ் ஆப் தி டெட்' என்ற நாவலை மையமாக வைத்து படம் இயக்க இருக்கிறார்.
இது விவசாயிகளின் தற்கொலை பற்றிய உண்மை சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாவல். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தற்கொலை செய்வது குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிய நீலிமா அந்த அனுபவங்களை நாவலாக்கி இருக்கிறார். மித்யாலா என்ற பகுதியில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறார்கள், அது அந்த தொகுதி எம்.பிக்கு பெரும் பிரச்சினையாகிறது.
விவசாயிகள் தற்கொலை சொந்த காரணங்களுக்காக நடக்கிறது என்பதாக காட்டிக் கொள்ள அவர் பல வில்லத்தனங்களை செய்கிறார். நிஜமாகவே விவசாயிகள் கடன் தொல்லையாலும், வறுமையாலும் சாகிறார்கள் என்பதை நிரூபிக்க கங்கிரி பத்ரா என்ற இளைஞர் போராடுகிறார். இருவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் நாவலின் கதை.
இதை தமிழ்நாட்டுக்கு ஏற்றமாதிரி மாற்றி வெற்றி மாறன் படமாக எடுக்க உள்ளார். நாவலை திரைக்கதை வடிவமாக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.