சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா தயாரிப்பாளர் ஆகப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், நயன்தாரா அப்படிப்பட்ட தகவல்களை மறுத்துள்ளார். வழக்கம் போல அவருக்கு நெருக்கமான அந்த ஒரே ஒரு மலையாளப் பத்திரிகையாளரிடம் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
“அப்படிப்பட்ட செய்திகளில் உண்மையில்லை. எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டும்தான், அதுதான் என்னுடைய வேலை. நான் தயாரிப்பாளராகப் போகிறேன் என்ற செய்தியில் துளி கூட உண்மையில்லை. தயாரிப்பில் எனக்குத் துளி கூட ஆர்வமில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தற்போது தமிழில் 'இருமுகன்' படத்திலும், தெலுங்கில் 'பாபு பங்காரம்' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், சற்குணம் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் திரைக்கு வர உள்ளது.
ஏற்கெனவே, காதல் காரணமாக சில பல கோடிகளை இழந்த நயன்தாரா எதற்காக படம் தயாரித்து மேலும் சில கோடிகளை இழக்க வேண்டும். நடிப்பு நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.