சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நயன்தாரா தமிழில் அறிமுகமான ஐயா படத்தில் கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார். அப்படம் முழுக்க பாவாடை தாவணி கெட்டப்பில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து இளவட்ட ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார். ஆனபோதும் அதன் பிறகு பெரும்பாலான படங்களில் மாடர்ன் கெட்டப்பில் நடித்த நயன்தாரா இடையிடையே தனக்கு பிடித்தமான கிராமத்து கதாபாத்திரங்களில் பாவாடை தாவணி கெட்டப்பில் தோன்றி வருகிறார்.
அந்த வகையில், உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல் படத்திலும் அதே காஸ்டியூமில் நடித்த நயன்தாரா, இப்போது ஜீவாவுடன் நடித்துள்ள திருநாள் படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்துதான் நடித்துள்ளார். அதோடு, வயல்வெளிகளில் அவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் திருநாள் படத்தில் தனது கேரக்டர் மட்டுமின்றி, இயற்கை அழகையும் ரசித்து ரசித்து நடித்துள்ள நயன்தாரா, இந்த படத்தின் எனது கேரக்டரும், காஸ்டியூமும் என்னை ரொம்ப இளமையாக்கி யுள்ளது என்று தான் நடித்த காட்சிகளைப்பார்த்து சொல்லி குதூகலித்தாராம்.