சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.பாக்யராஜின் சித்து ப்ளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதையடுத்து வில் அம்பு, நையப்புடை படங்களுக்குப்பிறகு அவர் கைவசம் 11 படங்கள் இருப்பதாக சொல்கிறார். இதுபற்றி சாந்தினி கூறுகையில், சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்து வந்தபோது நான் படித்துக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் சார் அழைத்ததினால்தான் அந்த படத்தில் நடித்தேன். பின்னர் படிப்பை தொடர்ந்ததால் அதன்பிறகு அதிகமான படங்களை ஏற்கவில்லை. நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் மட்டுமே நடித்தேன். ஆனால் இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். அதனால் முழுநேர நடிகையாகிவிட்டேன்.
அதன்காரணமாக, பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்கிற பாரபட்சம் பார்க்காமல் பிடித்தமான கதைகளாக ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் தமிழில் என்னோடு விளையாடு, தாமி, கண்ணுல காச காட்டப்பா உள்பட 8 படங்கள் உள்ளன. தெலுங்கில் 3 படங்களில் உள்ளன. இப்படி ஒரேநேரத்தில் 11 படங்களில் நடிப்பது பெரிய விசயம். இந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறும்போது நான் முன்னணி நடிகையாகி விடுவேன் என்று கூறும் சாந்தினி, இந்த படங்களில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நான் நடிப்பு, டப்பிங் என இரண்டு பக்கமும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.