சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தொடர் தோல்விகளை சந்தித்த செல்வராகவன் அதிலிருந்து மீண்டு வர ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அவர் நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்துவார். சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க மாட்டார் என்பதால் அவர் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில் தான் கான் படத்தை தொடங்கினார். இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தயாரிப்பாளர். சிம்பு, டாப்சி, ஜெகபதி பாபு நடித்தார்கள். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்கவில்லை.
செல்வராகவனும நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். இதில் எஸ்.ஜே சூர்யா ஹீரோ, ரெஜினா ஹீரோயின், நந்திதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதனால் செல்வராகவன் கானை கைவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால் செல்வராகவன் இதை மறுக்கிறார். “கான் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் எதிர்பாராத ஒன்று. தயாரிப்பாளர் தயார் என்றால் நாளைக்கே நாங்கள் படப்பிடிப்புக்கு தயார். சிம்பு உள்பட அனைவருமே கான் படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. கான் படத்தை எடுத்து முடிப்பேன்” என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை” என்கிறார் செல்வராகவன்.