நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
மக்களுக்கு நன்கு அறிமுகமான காமெடி நடிகர் செல்வகுமார். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்துள்ளார். கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் செல்வகுமார் தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரும் தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் செல்வகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வகுமார் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 58. கோவை செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். செல்வகுமாரின் இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடக்கிறது. செல்வகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.