சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி. 2013ல் வெளிவந்த அந்தப் படம் வித்தியாசமான கதை, திரைக்கதை கொண்ட படமாக அமைந்து வெற்றி பெற்றது. வளர்ந்து வரும் நேரத்திலேயே 40 வயதைக் கடந்த ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார் நலன். அதற்கடுத்து மூன்று வருடம் கழித்து நலன் இயக்கியுள்ள 'காதலும் கடந்து போகும்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 'சூது கவ்வும்' படத்திற்கு அடுத்து சுந்தர் .சி இயக்கத்தில் வெளிவந்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திற்கு நலன் குமாரசாமி வசனம் எழுதியதுடன் திரைக்கதை உருவாக்கத்திலும் பங்கெடுத்தார்.
தற்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராக அறிமுகமாகும் 'மாயவன்' படத்திற்கு நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நலன் குமாரசாமி இயக்கிய 'சூது கவ்வும், காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் சி.வி.குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி இரண்டாவதாகவும் படம் இயக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்காக நலன் மீண்டும் வசனம் எழுதுகிறார்.
நலன் இயக்கி அடுத்த மாதம் வெளிவர உள்ள 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு இப்போதே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.