சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த படம் விசாரணை. வெற்றிமாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றது! சில வாரங்களுக்கு முன் வெளியான விசாரணை படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி உட்பட, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. எனினும் வசூல் ரீதியாக விசாரணை படம் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் விசாரணை படத்தின் ஹிந்தி ரீ-மேக் உரிமையை பிரபல மலையாளப்பட இயக்குனர் ப்ரியதர்சன் வாங்கியுள்ளார். இப்படத்தை விரைவில் ஹிந்தியில் ப்ரியதர்சன் இயக்கவிருக்கிறார் என்றும் அதில் அக்ஷய் குமார் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விசாரணை படத்தை இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்க இருக்கிறார் என்ற தவகல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம்.... ப்ரியதர்ஷன் கமர்ஷியல் படங்களை இயக்குபவர். விசாரணை படமோ வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்ட மிகச்சிறந்த படைப்பு.
அதை ப்ரியதர்ஷன் இயக்கி அதில் அக்ஷய் குமார் நடித்தால் அந்தப் படம் மசாலாப்படமாகிவிடுமே என்று கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் சிலர் விசாரணை படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை ப்ரியதர்ஷனுக்கு விற்காமல் நீங்களே இயக்குங்கள் என்று வெற்றிமாறனுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். இதுதான் உண்மையான படைப்பின் வெற்றி.
வெற்றிமாறன் புரிந்து கொள்வாரா?