சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'சென்னை 28' படத்தின் மூலம் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக படமெடுத்து இயக்குனர் ஆனவர் வெங்கட் பிரபு. அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'சரோஜா, கோவா' ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் போனது. இருந்தாலும் 'மங்காத்தா' படத்தின் மூலம் வித்தியாசமான அஜித்தைக் காட்டி அவரும் தன்னை ஒரு இயக்குனராக அடையாளம் காட்டிக் கொண்டார். அந்த ஒரு வெற்றியே அவருக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத் தந்தது.
கார்த்தி நடித்த 'பிரியாணி', சூர்யா நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி' ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்தப் படங்களும் தோல்வியடைந்ததால் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே படம் இயக்க அட்வான்ஸ் கொடுத்திருந்தவர்களும் அதைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.
இதனால் தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வெங்கட் பிரபு ஆளாகியிருக்கிறார். மற்ற யாரும் வாய்ப்பு தராததால் தானே சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மீண்டும் தான் ஆரம்பித்த இடத்திலிருந்தே தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை வெங்கட் பிரபு ஆரம்பிக்க உள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.