சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கௌதம் மேனன் முன்னைவிட தற்போது சுறுசுறுப்பாகிவிட்டார். தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். அதில் ஒரு படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இன்னொரு படத்திற்கான ஹீரோவாக தனுஷ் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது!
கௌதமுடன் முதல்முறையாக தனுஷ் இணையவிருக்கும் இப்படத்திற்கு 'என்மேல் பாயும் தோட்டா' என்ற தலைப்பை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கௌதம் மேனன் தயாரித்த நீ தானே பொன் வசந்தம் உட்பட பல படங்கள் தோல்வியடைந்ததால் தயாரிப்பாளராக கடும் பண நெருக்கடியில் இருந்து வந்தார் கௌதம் மேனன். அதன் காரணமாகவே ஏம்.எம்.ரத்னத்துக்கு 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கினார்.
இந்நிலையில், லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தான் கௌதம் மேனனுக்கு பெரும் தொகையை பைனான்ஸாக கொடுத்துள்ளதாம். அந்தப் பணத்தை வைத்தே ஜெயம் ரவி, தனுஷ் ஆகியோருக்கு பெரும் சம்பளம் கொடுத்து அவர்களை கமிட் பண்ணியுள்ளாராம் கௌதம் என கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.