வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் தலைமையிலான அணியினர் மகத்தான வெற்றி பெற்றனர். தேர்தல் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்ததால், உயர்நீதி மன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை நடத்தியது.
தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் வாக்குசீட்டுகள், தேர்தல் சம்பந்தமான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. தேர்தலை எதிர்த்து வழக்கு போடுகிறவர்கள் 3 மாதத்திற்குள் வழக்கு போடலாம் என்பது சட்டவிதி. இதுவரை யாரும் வழக்கு எதுவும் போடாததால் சட்டவிதிகளின்படி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரியான முன்னாள் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நேற்று நடிகர் சங்க வளாகத்தில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.