சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி, பிரேமம் புகழ் சாய் பல்லவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக திரைத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம்.
கார்த்தி, துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். அந்தக்கதையைக் கேட்டுவிட்டு கார்த்தி, துல்கர் இருவரும் நடிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் இருவரது தேதிகளும் சரியாக அமையவில்லை. எனவே அந்தப்படத்தை இயக்கும் எண்ணத்தையே ஒத்தி வைத்தார் மணிரத்னம்.
அதன் பிறகு கார்த்தி மட்டும் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் கதையை எழுத ஆரம்பித்தார். தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.
நாகார்ஜுனா உடன் நடிக்கும் தெலுங்குப் (தமிழில் தோழா) படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, தற்போது காஷ்மோரா படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்தை வழக்கம்போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல். கார்த்தி, சாய் பல்லவி உடன் மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.