சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று 'விசாரணை, பெங்களூர் நாட்கள், சாகசம், சேது பூமி, நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆறு படங்கள் வெளிவந்தாலும் 'பெங்களூர் நாட்கள், விசாரணை' ஆகிய படங்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி.
வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பாராட்டியதை வைத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அது படத்திற்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். இருந்தாலும் மல்டிபிளக்ஸ்களில் மட்டும் இந்தப் படம் ஓடும் என்று சொல்கிறார்கள். இடைவேளைக்குப் பின் படம் இழுவையாக உள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
'பெங்களூர் நாட்கள்' படம் மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்பதால் இங்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தில் எந்த விதமான 'ட்விஸ்ட் அன்ட் டேர்ன்' திரைக்கதையில் இல்லாதது படத்திற்கு பெரிய மைனஸ் பாயின்டாக உள்ளது. தமிழ்ப் படம்தான் என்றாலும் படத்தில் ஒரு அன்னியத்தனம் இருப்பது ரசிப்பதற்குத் தடையாக உள்ளது. இருந்தாலும் படம் ரசிக்கும்படியாக உள்ளது. படத்தின் நீளத்தைக் குறைத்தால் பி அன்ட் சி சென்டர்களிலும் படம் ஓடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார்கள்.
பிரசாந்த் நடித்து வெளிவந்துள்ள 'சாகசம்' திரைப்படம் 90களில் வந்த படத்தின் கதையைப் போல உள்ளது. தன் சக காலத்திய நடிகர்களான அஜித், விஜய் இன்னமும் கலக்கிக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன்னதாகவே திரையுலகில் அறிமுகமான பிரசாந்த் பல திறமைகள் இருந்தும் இன்னமும் தடுமாறிக் கொண்டுதானிருக்கிறார்.
மொத்தத்தில் பிப்ரவரி 5ல் வெளிவந்த படங்கள் இந்த வார வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கிறார்கள்.