சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நயன்தாரா ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் இணக்கமாக இருக்க மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு நிறையவே உண்டு. நடிக்க வந்த புதிதில் அனைவருடனும் நட்பாகப் பழகியவர்தான் நயன்தாரா. தொடர்ச்சியாக வந்த நயன்தாரா பற்றிய காதல் வதந்திகளால் அவர் தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டார். அதன் பின் யாருடனும் அவர் தொடர்பு எல்லைக்குள் வருவது கூடக் கிடையாது. அவர் நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்குக் கூட வருவதில்லை. யார் என்ன சொன்னாலும் எதையும் கேட்காமல் அவர் முடிவில் மாறாமலே இருந்தார்.
அவர், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் நீண்ட வருடங்களாகிவிட்டது. தற்போது விக்ரம் ஜோடியாக முதன் முறையாக நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பில் மலேசியாவில் இருக்கிறார் நயன்தாரா. அங்கு அவரைத் தேடி வரும் ரசிகர்களையும் பார்த்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் அவர்கள் புகைப்படங்களை எடுக்கக் கேட்டாலும் மகிழ்ச்சியாக சம்மதிக்கவும் செய்கிறாராம்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் படக் குழுவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளதாம். இதனிடையே, நயன்தாராவை கடுப்பேற்றும் ஒரு விஷயமாமக 'இது நம்ம ஆளு' படத்திற்காக சிம்பு, ஆன்ட்ரியா இடம் பெற உள்ள ஒரு பாடலை விரைவில் படமாக்க உள்ளார்களாம். நியாயமாக அந்தப் பாடலில் நயன்தாரா தான் நடிக்க வேண்டியது என்கிறார்கள். நயன்தாராவின் அடுத்த வெளியீடாக 'திருநாள், இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.