சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அரண்மனை 2 படப் பிரச்னை, சுமுகமாக முடிந்துள்ளது. சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தயாரிப்பாளர் முத்துராமன் தாக்கல் செய்த மனு:நடிகர் ரஜினிகாந்த், நடிகை லதா நடிப்பில், ஆயிரம் ஜென்மங்கள் படத்தை, 1978ல் தயாரித்தேன். இக்கதையை மையமாக வைத்து, என் அனுமதியின்றி, இயக்குனர் சுந்தர்.சி, அரண்மனை படத்தை எடுத்தார். இதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தேன். இரண்டு படங்களையும் பார்த்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சுந்தர்.சி, அரண்மனை 2 படத்தை எடுத்துள்ளார்; இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி டேனியல் அரிபாபு, இரு தரப்பினரும் சமரச பேச்சு நடத்தி, சுமுக முடிவு எடுத்து தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி, முத்துராமன் மற்றும் சுந்தர்.சி இடையே நடந்த பேச்சில் சமரசம் ஏற்பட்டுள்ளது. படத்தின் கதை உரிமைக்கு, தயாரிப்பாளருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து, இரு தரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்த பத்திரத்தை தாக்கல் செய்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சமரச ஒப்பந்தத்தை ஏற்கிறேன். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், சுந்தர்.சி பிப்., 1ல் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அரண்மனை 2 படம் நேற்று வெளியானது.