சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பெங்களூரைச் சேர்ந்த அகிலா கிஷோர் கன்னடப் படங்களில் நடித்து வந்தார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் பார்த்திபன். அந்தப் படம் வெற்றி பெறவே அகிலா பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து அவர் சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். அதுதான் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
காமெடியன்களுக்கு ஹீரோயினாக நடித்தால் அதன் பிறகு ஹீரோக்களுடன் நடிப்பது சிரமம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. என்றாலும் அவர் புதுமுகம் சுனில் குமாருடன் நடித்துள்ள மூன்றாம் உலகப்போர் வருகிற 22ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் ராணுவ வீரனின் காதலியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் அவருக்கு நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்ற நம்புகிறார். இனி தமிழில் தன் பணிகளை கவனித்துக் கொள்ளவும் கதை தேர்வு செய்யவும் தனியாக மேனேஜரை நியிமித்துள்ளார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்கு பிறகு கன்னடத்தில் 3 படங்களில் நடித்து முடித்து விட்டார் அகிலா. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அகிலா நடிக்க இருக்கிறார்.